கந்த சஷ்டி விரதம்
கந்த சஷ்டி விரதம்: {எல்லோருக்கும் உள்ள ஆழமான கேள்விகள்... (1)அப்படி என்ன இந்த கந்த சஷ்டி விரத்தில் இருக்கிறது? (2)கந்தசஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கும் முறை என்ன? (3)கந்த சஷ்டி விரத மகிமைகள், விரதத்தின் பலன் என்ன? (4)வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படி முழுமையக கடைபிடிப்பது? சஷ்டியில் ஷண்முகன் தரிசனம்:- கந்த சஷ்டிவிரதம் தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய! கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர். செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் வி...