Posts

Showing posts from October, 2022

கந்த சஷ்டி விரதம்

 கந்த சஷ்டி விரதம்: {எல்லோருக்கும் உள்ள ஆழமான கேள்விகள்... (1)அப்படி என்ன இந்த கந்த சஷ்டி விரத்தில் இருக்கிறது? (2)கந்தசஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கும் முறை என்ன? (3)கந்த சஷ்டி விரத மகிமைகள், விரதத்தின் பலன் என்ன? (4)வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படி முழுமையக கடைபிடிப்பது? சஷ்டியில் ஷண்முகன் தரிசனம்:- கந்த சஷ்டிவிரதம் தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய! கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர். செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் வி...

ஆகாசகருடன்

https://www.youtube.com/watch?v=hR8yJQN5kc4 https://youtu.be/mre07T-AEhM https://www.youtube.com/watch?v=sJJpf_2jxX4 வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, கெட்ட சக்தியை கண்டுபிடிக்க இதோ ஒரு சுலபமான வழி! ஆகாச கருடன் கிழங்கை நம்முடைய வீட்டு வாசலில் கட்டி வைத்தால் கண் திருஷ்டி விலகும். அதேசமயம் ஏவல் பில்லி சூனியம் போன்ற பெரிய பெரிய பிரச்சனைகளை கூட தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த ஆகாச கருடன் கிழங்கை முறையாகத்தான் நம்முடைய வீட்டில் கட்டி வைத்திருக்கின்றோமோ? வெறுமனே இந்தக் கிழங்கை வாங்கி கட்டி வைத்துவிட்டால் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியுமா என்ற சில சந்தேகங்களுக்கான பதிலைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த ஒரு விஷயத்தையும் சரியான முறையில் செய்யும் போது தான் அதனுடைய முழு பலனையும் நம்மால் அனுபவிக்க முடியும். அதே போல்தான் இந்த ஆகாச கருடன் கிழங்கை வாங்கும்போது அது சாப நிவர்த்தி செய்யப்பட்டு எடுக்கப்பட்டதா, என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சாப நிவர்த்தி செய்யப் படாமல், பரிகாரத்திற்காக எடுக்கப...

ஆன்மா

ஆன்மா https://www.youtube.com/results?search_query=%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE   ஆன்மாவை அறிதல், ஆன்மாவை அடைதல், ஆன்ம அனுபூதி என்றெல்லாம் சொல்வதன் பொருள் என்ன என்பதை இந்த மந்திரம் விளக்குகிறது. ப்ரதிபோதவிதிதம் மதமம்ருதத்வம் ஹி விந்ததே I ஆத்மனா விந்ததே வீர்யம் வித்யயா விந்தேம்ருதம் II 4 II பொருள்: உணர்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆன்மாவை அறிபவனே உண்மையில் அறிகிறான் என்பது கருத்து. அப்படி அறிந்தவன் நிச்சயமாக மரணமிலாப் பெருநிலையை அடைகிறான். ஆன்மாவிலிருந்து ஆற்றல் கிடைக்கிறது. ஞானத்தால் மரணமிலாப் பெருநிலை அறியப்படுகிறது. உடம்பு, மனம், ஆன்மா என்று பலவற்றால் அமைந்த தொகுதி மனிதன். ஆன்மா மட்டுமே உணர்வுப் பொருள்; மற்ற அனைத்தும் உணர்வற்றவை. தீக்குள் இடப்பட்ட இரும்பு தீ போலவே ஜொலிக்கிறது. அந்த இரும்பின் ஒளியும் சூடும் உண்மையில் அதற்கு உரியவை அல்ல. தீயின் தொடர்பால், இரும்பு தீ போல தெரிகிறது. அதுபோலவே ஆன்மா என்ற உணர்வுப் பொருளின் தொடர்பால் உடம்பு, மனம் போன்றவை உணர்வுப் பொருள் போலத் தோன்றுகின்றன. உணர்வின் ஒவ்வொரு நிலையிலும் ஆன்ம உணர்வு உணரப்பட வேண்டும் என்கிறது மந்திரம். அதாவது...

நவக்கிரக தோஷம்

 நவக்கிரக தோஷம் ஒரே நாளில் நீங்கனுமா மயிலாப்பூருக்கு வாங்க!  சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். ஆனால் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவக்கிரகத்தோடு தொடர்பு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவை சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது இதன் விசேஷமாகும். இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும். இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை.  இந்த ஏழு கோயில்களுமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்த...