Posts

Showing posts from May, 2022

தீபலக்ஷ்மி Dheepalakshmi

தீப லட்சுமியை துதிப்போம். தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:  தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன். 2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:  சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே… எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன். 3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ  ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ  கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ  விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ எவரால் தினமும் தீபம் ஏற்றப்படுகிறதோ அவரது இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல ...

நட்சத்திரங்கள் 27

Image
Please revisit for updates. https://youtu.be/uBsOujnGMoQ   27 நட்சத்திரங்கள்... ஏ டூ இஸட் தகவல்கள்! 2 - புதிய தொடர் :  அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் குணங்கள் வணக்கம். இப்போது நட்சத்திரங்களின் தனித்தன்மையைப் பார்ப்போம். முதலில் நாம் பார்க்கப்போவது அஸ்வினி நட்சத்திரம்.27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம். ஏன் அஸ்வினி நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக இருக்கிறது? இந்தக் கேள்வி பலருக்கும் வரலாம். இதற்குக் காரணம் உண்டு. ஒவ்வொரு குழந்தையும் போது கிராமத்து மருத்துவச்சி முதல் நகரங்களில் உள்ள மருத்துவர் வரை அவர்களின் உதவியோடுதான் பிறக்கிறது. அதுமட்டுமல்ல தாய் மற்றும் குழந்தை என்னும் இரட்டை உயிர்களை பிரித்தெடுப்பதுதான் பிரசவம். இந்த இரட்டை உயிர் அம்சம்தான் அஸ்வினி குமாரர்கள். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை - அஸ்வினி குமாரார்கள். இவர்கள் இரட்டையர்கள். தேவ மருத்துவர்கள். இவர்கள் இரட்டையர்களாக அழைக்கும் போதுதான் அஸ்வினி குமாரர்கள், இவர்களின் தனிப்பெயர்... ஒருவர் நாசத்யா. மற்றொருவர் தஸ்ரா. உருவம் - குதிரை முகம். பாண்டவர்களில் நகுலனும் சகாதேவனும் இந்த அஸ்வினி குமாரர்களுக்குப் பிறந்தவர்கள். இ...

ஆதீனம்

 ஆதீனம் என்பதும் மடங்கள் என்பதும் ஒன்றல்ல. ஆதீனங்கள் வேறு மடங்கள் வேறு. ஆதீனம் என்பது பல சொத்துகளும், பல கோயில்களை கொண்டுள்ளவை. அது ஒரு பெரிய சமஸ்தானம் போன்றது - தனி அரசாங்கம் போன்றது. https://www.youtube.com/watch?v=7r-ZY7d3JPk https://www.youtube.com/watch?v=dJGIUEZYSmA 1. தருமபுர ஆதீனம், 2. திருவாவடுதுறை ஆதீனம், 3.மதுரை ஆதீனம், 4. வேளாக்குறிச்சி ஆதீனம், 5. நாச்சியார் கோயில் ஆதீனம், 6. ராமேஸ்வரம் ஆதீனம், 7.திருப்பனந்தால் ஆதினம், 8.குன்றக்குடி ஆதீனம், 9. தொண்டைமண்டல ஆதினம், 10 சிம்போள ஆதீனம், 11.துலாவூர் ஆதீனம், 12. நீலப்பாடி ஆதீனம், 13. செங்கோல ஆதீனம் 14. சூரியனார் கோயில் ஆதீனம், 15.தாயுமானவர் ஆதீனம், 16. தரணி ஆதினம், 17. சுர்க்கபுர ஆதீனம் 18. ஆகம சிவபிரகாச அதீனம் அத்தனை ஆதீனங்களுக்கும் குருவாக இருப்பவர்கள் சைவ வேளாளர்கள் மாத்திரமே. இதில் மதுரை ஆதீனம் திருஞான சம்பதருக்கு முன்பே இருந்துள்ளது. சம்பந்தர் யாரை அங்கே அமர்த்தினார் ? அத்தனை ஆதீனங்களையும் நிர்வகிப்பது வேளாளர்கள் மாத்திரமே. வேளாளர்களில் பல பிரிவுகள் இருந்தும் ஆன்மீக பிரிவாக இருப்பது ""சைவ வேளாளர்"" மாத்திர...

புதிர் / வினாடிவினா

கேள்விகளுக்கு பதில் கொஞ்சம் ஆழமா படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம். முயற்சி செய்து பாருங்கள். 1. கருடாழ்வாரின் இயற்பெயர் எது?    1. வைனதேயன்  2.ஸ்ரீபெரும்புதூர் 3. தருமசேனர் 2. அக்காலத்தில் பூத புரி என்று அழைக்கப்பட்ட ஊரின் தற்போதைய பெயர் என்ன?  2.ஸ்ரீபெரும்புதூர்  3. தருமசேனர்  4. நரசிம்மர் 3.  திருநாவுக்கரசர் சமண மதத்தில் இருந்தபொழுது எவ்வாறு அழைக்கப்பட்டார்?    3. தருமசேனர்  4. நரசிம்மர்  5. அமிர்தவர்ஷினி 4. பிரதோஷ வழிபாட்டில் வழிபடக்கூடிய ஒரு வைஷ்ணவ பெருமாள் யார்?        4. நரசிம்மர்   5. அமிர்தவர்ஷினி   6. பொய்கையாழ்வார் 5. மழை வேண்டி பாடக்கூடிய ராகம் எது?  5. அமிர்தவர்ஷினி   6. பொய்கையாழ்வார்   7. சூரியபகவான் தர்மருக்கு கொடுத்தது 6. பாஞ்சஜன்யம் என்கின்ற சங்கின் அவதாரமாக பிறந்த ஆழ்வார் யார்?     6. பொய்கையாழ்வார்  7. சூரியபகவான் தர்மருக்கு கொடுத்தது    8. வாலி 7.  மகாபாரதத்தில் உள்ள அட்சய பாத்திரம் யாரால் யாருக்கு கொடுக்கப்பட்டத...

அட்சய திருதியை

Image
  அட்சய திருதியை பூஜை நேரம் ‌ குறித்த தகவல்கள் ... அக்ஷய திருதியை ... செல்வம் தரும் புனித நீராடல் முறை ...   https://www.youtube.com/watch?v=VW6JZ55OkF8 https://www.youtube.com/watch?v=kDXV2FtTnv0 https://www.youtube.com/watch?v=wfzHBytY_uY https://drive.google.com/file/d/1vvxVWpQxlffIjFxvV9PnhWmHyRliRQxY/view?usp=sharing   அட்சய திருதியை என்றால் ‌ வளர்க என்று பொருள் ‌. அட்சய திருதியை நாளில் ‌ செய்யும் ‌ செயல் ‌ மேன்மேலும் ‌ வளரும் ‌ என்பது நம்பிக்கை . அட்சய திருதியை நாளில் ‌ நாம் ‌ வாங்கும் ‌ பொருட்கள் ‌ மேன்மேலும் ‌ வளரும் ‌. அன்றைய தினம் ‌ கல் ‌ உப்பு . மஞ்சள் ‌ வாங்கினாலும் ‌ தங்கம் ‌ வாங்குவதற்குரிய பலன்கள் ‌ இடைக்கும் ‌. நம்முடைய வீட்டில் ‌ செல்வம் ‌ பெருகும் ‌. சுக்கிரன் ‌ ஆசி நிறைந்த வெள்ளிக்கிழமை அட்சய திருதியை வருவது சிறப்பானதாகும் ‌.   பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான் . பிரளயம் முடிந்து , வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து , சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம் ....